திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
திஸ்ஸமகாராம பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்தை எதிர்நோக்கியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை தம்புளை குருநாகலை வீதியின் கலேவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குருநாகலவிலிருந்து கலேவல நோக்கி பயணித்த கெப் ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.






