தொடரும் மழையுடனான காலநிலை : மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!!

489

நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த மாவட்டத்தின் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய அவதான பகுதிகளில் வாழும் மக்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் சூழலில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.