இலங்கை மக்களை வியக்க வைத்துள்ள பாரிய முட்டை!!

472

 
அண்மையில் காலியில் பாரியதொரு கோழி முட்டை ஒன்று மீட்கப்பட்டிருந்தது. காலி, திக்கும்புர அந்துகொட பகுதியிலுள்ள பண்ணை ஒன்றிலிருந்து இந்த முட்டை மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த முட்டை தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

52 வயதான கருணாரத்ன என்பவர் கடந்த 15 வருடங்களாக கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகின்றார். அந்த கோழி பண்ணையில் முட்டையிடும் 500க்கும் அதிகமான கோழிகள் உள்ளதாக கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தினமும் காலை எழுந்தவுடன் முட்டை சேகரிக்கும் அவருக்கும் ஏனைய நாட்களை விடவும் மிகப் பெரியளவிலான கோழி முட்டை ஒன்று கிடைத்துள்ளது. குறித்த முட்டை சுமார் 200 கிராம் நிறையுடையதென தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண முட்டையை விடவும் இரண்டு மடங்கு பெரியதாக இந்த முட்டை காணப்படுகின்றது. சாதாரண முட்டை ஒன்று 4 அங்குலம் நீளம் மற்றும் 6 அடி சுற்றுவட்டத்தை கொண்டிருக்கும் எனினும் இந்த முட்டை 5.5 அங்குலம் நீளமும் 9 அடி சுற்றுவட்டத்தையும் கொண்டுள்ளது.

சாதாரண முட்டை ஒன்றின் நிறை 85 – 95 கிராமில் காணப்படும். எனினும் இது 200 கிராம் ஆக காணப்படுகிறது. இவ்வாறானதொரு பாரிய முட்டையை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என அந்தப் பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர்.