பெண்ணின் புகைப்படத்தை தவறாக காட்டிய பாகிஸ்தான் : புகைப்படக்காரர் வேதனை!!

248

ஜெருசலேமினைச் சேர்ந்த ஹெய்தி லெவின், தற்போது அமெரிக்காவில் தங்கி செய்தி நிறுவனங்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கிறார்.

சண்டை நிகழும் இடங்களில் இவர் எடுத்துள்ள படங்கள் உலகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காஸாவில், இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகளை அவர் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அதில் அங்கு குண்டு தாக்குதலுக்கு பலியான ரவ்யா அபு ஜோம் என்ற பெண்ணின் புகைப்படமும் இருந்தது. ஏனெனில் இத்தாக்குதல் எப்படிப்பட்ட தாக்குதல் என்பதை காட்டுவதற்கு இருந்தது.
இந்நிலையில் ஐநா சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் உலகுக்கு தீவிரவாதத்தினை ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்குவதாக குற்றம் சாட்டினார்

பின்னர் பேசிய ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தரத் தூதர் மலீஹா லோதி, காஷ்மீரில் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தும் இந்தியாவின் ஜனநாயகம் இதுதான் என்று கூறி, காஷ்மீர் தாக்குதலில் பலியான பெண் என்று ஒருவரின் புகைப்படத்தினை காட்டினார்.

மறுநாள் இதற்கு பதில் அளித்துப் பேசிய இந்தியா, மலீஹா காட்டிய படம் போலி என்றும், அது உண்மையில் ஹெய்தி லெவினால் எடுக்கப்பட்ட ரவ்யா அபு ஜோமின் புகைப்படமாகும்.
இது குறித்து லெவின் கூறுகையில், எனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் இத்தகைய செயல்களை கண்டு மனம் வலிக்கிறது.

புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவ்யா அபு ஜோமின் கெளரவத்தினை சீர்குலைக்கும் செயலாகவும் இது அமைந்திருப்பதால் பாகிஸ்தான் கண்டிப்பாக அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று தெரிவித்தார்.