வவுனியாவில் திருட்டுடன் தொடர்புடைய இராணுவ வீரர் உட்பட மூவர் கைது!!

834

வவுனியாவில் பல்வேறு பட்ட திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ வீரர் உட்பட மூவரை வவுனியா பொலிஸார் நேற்று (27.09.2017) கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் வீதியில் நடந்து செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிலில் வந்தவர்கள் தங்கச்சங்கிலி அபகரிப்பு, நகைகள் திருட்டு என பல்வேறு முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்தவின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாம் தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் போது வவுனியாவில் வைத்து நேற்றையதினம் (27.09.2017) 20, 21, 25 வயதுடைய அனுராபுரம், நிராவி, சாலபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.