செல்ஃபி எடுத்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் தந்தை, அம்புலன்ஸ் மற்றும் பிரேத பரிசோதனைக்குக் கூட பணம் கேட்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
குட்டையில் மூழ்கி இறந்து கொண்டிருந்த நண்பனைக் கவனிக்காமல், சக நண்பர்கள் செல்ஃபி எடுத்த துயர சம்பவம் பற்றிய செய்திகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகின.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல அம்புலன்ஸை தொடர்பு கொண்ட போது, அவர்கள் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் ஒரு அம்புலன்ஸ் ஓட்டுநர் 5 ஆயிரம் கேட்டார். அவரை விட்டுவிட்டு, தனியார் மருத்துவமனையின் அம்புலன்ஸை பிடித்து அதில் மகனின் உடலை ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.
மருத்துவமனையில் மகனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பணம் கேட்டார்கள். என்னிடம் இல்லை என்று சொன்னதால், உடலை பிரேதப் பரிசோதனை செய்து என்னிடம் ஒப்படைக்க கால தாமதம் செய்தார்கள்.
கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் என் மகன் உயிரிழந்து விட்டான். அந்த சோகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் நான், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து பிரேத பரிசோதனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்கிறார் வேதனையோடு.