வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சர்வதேச குருதிக்கொடையாளர்கள் தினம்!!

637

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (30.09.2017) காலை 10 மணியளவில் சர்வதேச குருதிக்கொடையாளர்கள் தினம் இரத்த வங்கியின் வைத்தியர் தலமையில் இடம்பெற்றது.

மாணவிகளின் வரவேற்பு நடனம் ஆரம்பமான இந் நிகழ்வில் , கலை நிகழ்வுகள், 10க்கு மேற்ப்பட்ட தடவைகள் இரத்தம் வழங்கிய குருதிக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், பம்பைமடு இறை இரக்க ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்லி ஜெகானந்தன், இரத்த வங்கி வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், குருதிக்கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.