இலங்கையில் எயிட்ஸ் தாக்கம் அதிகரிப்பு!!

640

aids

நாட்டில் எயிட்ஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எயிட்ஸ் நோய்த் தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதிகரிப்பதற்கான காரணிகளை கண்டறிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பனவற்றை அறியத்தருமாறு இந்தக் குழுவிடம் அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க அறிவித்துள்ளார்.

இருப்பினும் இலங்கையில் தாயிடமிருந்து பிள்ளைக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கான இரத்த பரிசோதனைகளை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.