கொழும்பு வீதியில் வாகன விபத்து : ஒருவர் பலி,  22 பேர் படுகாயம்!!

1115

 
கொழும்பு, பதுளை பிரதான வீதியில் அப்புத்தளை உடு விகாரகல எனும் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த 22 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளையிலிருந்து மரங்காவெல, கொஸ்கம பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அப்புத்தளை, தியத்தலாவ, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.