விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

456

child abuse

தமிழ்நாட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை வேனில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் பகுதியின் வழியாக சென்ற மினி வேன் ஒன்று திடீரென பள்ளியின் சுற்றுச் சுவர் மீது மோதி நொறுங்கி கிடந்தது.

அப்போது வேனிலிருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டதால் அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதிகள் சந்தேகப்பட்டு வேன் அருகே சென்று பார்த்தபோது கண்ணாடியை உடைத்து கொண்டு ஒருவர் வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தார்.

மேலும் வேனுக்குள் ஆடை இல்லாமல் ரத்தவெள்ளத்தில் சிறுமி ஒருவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் கூச்சல் போட்டுள்ளனர். அவர்களுடைய சத்தம் கேட்டு மக்கள் அங்கு திரண்டனர். முதலில் சிறுமியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்பு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையில் குடிவெறியில் இருந்த ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.

அவரை பொலிசார் மீட்டு விசாரணை நடத்தியதில் ஈஞ்சம்பாக்கம் கவுரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார்(32). இவர் மினி வேன் ஒட்டுகிறார். தினமும் கோயம்பேடு சந்தைக்கு சென்று தண்ணீர் கேன் வியாபாரமும் செய்து வருகிறார்.

இந்நிலையில் ஆயுத பூஜையான நேற்று வாகனத்துக்கு பூஜை செய்துவிட்டு மது அருந்திவிட்டு வேனில் சுற்றிய இவர் பெருங்குடியில் உள்ள பழக்கடை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து என்னுடன் வந்தால் விளையாட பொம்மை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி சிறுமியும் அவருடன் வேனில் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதில் சிறுமியின் கன்னம், கை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.

தொடர்ந்து போதையில் வேனை ஓட்டி சென்ற போது பள்ளி சுவர் மீது மோதி உள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.