8 வயது பெண் குழந்தைகள் நால்வருடன் ஜெயம் ராஜா நடிக்கும் என்ன சத்தம் இந்த நேரம்!!

480

enna satham intha neram

ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படம் என்ன சத்தம் இந்த நேரம். இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்றிய குரு ரமேஷ் இயக்குகிறார்.

உலக சினிமாவில் முதல்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து, ஒரே தோற்றம் கொண்ட 8 வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாகா இசையமைக்கிறார். சஞ்சய் பி.லோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் குரு ரமேஷ் கூறும்போது,

பிரபல திரைப்பட இயக்குனர் ஜெயம் ராஜா இப்படத்தின் கதையை கேட்டு மிகவும் பிடித்துபோக தனது படம் சம்பந்தமான வேலையில் மும்முரமாக இருந்தாலும் அவ்வப்போது நேரம் ஒதுக்கி முதன்முறையாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஜித் நடித்த காதல் மன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மாணு பதினைந்து வருடங்களுக்கு பின் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நிதின் சத்யா, மாளவிகா வேல்ஸ், புரளவன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, சிவசங்கர், வையாபுரி, லொல்லு சபா சுவாமிநாதன் இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் படப்பிடிப்பு ஐதராபாத்திலும், மூன்றாம் கட்டமாக சென்னையிலும் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.