வரையறையின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்குவதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.
நேற்று (03.10) நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் அரிசி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், டின்மீன், ஆகியவற்றை இறக்குமதி செய்யவுள்ளதாக வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களை குறைந்த விலையில் சதோச ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 8 அரிசி வகைகள் மற்றும் நெத்தலி மீனின் விலைகள் கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறைவடைந்தன.






