கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேர் கைது!!

232

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இலவசமாக தங்கியிருந்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேகத்திற்கிடமாக, விமான நிலையத்தில் இலவசமாக தங்கியிருந்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 60 பேரையும் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களுக்கு தலா 1,500 வீதம் மொத்தம் 90,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.