மதுபானம் என நினைத்து கிருமிநாசினியை பருகிய நபர் பரிதாபமாக மரணம்!!

1050

மதுபானம் என நினைத்து கிருமி நாசினியை பருகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் மதுபான போத்தலில் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியை, குறித்த நபர் மதுபானம் எனக் கருதி அருந்தியுள்ளார்.

கம்பஹா, வதுரகம, படேபொல என்னும் முகவரியைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.