இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் ரயில் விபத்துக்களினால் 380 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன, கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ரயிலில் மோதுதல், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொள்ளல், பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பயணித்தல், ரயில் பாதையில் செல்பீ புகைப்படம் எடுத்தல் போன்ற காரணிகளினால் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் கரையோர ரயில் பாதையில் ரயிலில் மோதுண்டு எட்டு பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






