வவுனியா வடக்கில் புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவன் மாவட்ட நிலையில் மூன்றாம் இடம்!

953

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடம் இடம்பெற்ற  புலமைப்பரிசில் பரீட்சையில்    வவுனியா வடக்கு  வலயத்துக்குட்பட்ட  புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தை சேர்ந்த  மாணவன் ஒருவர் மூன்றாம் இடத்தையும்   பெற்றுள்ள்ளார்.

பின்தங்கிய கிராம குடும்ப சூழ்நிலையை உடைய செல்வன் வி.ரிசான் 186 புள்ளிகளை பெற்று வவுனியா மாவட்டத்தில் 3வது இடத்தை பெற்றுள்ளான் வறுமை வாட்டியபோதும் தளராது தன் திறமையை வெளிப்படுத்தி மாவட்ட மட்டத்தில்  மூன்றாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.