ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பொலிஸாரால் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மங்கள சமரவீர 1 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மங்கள சமரவீரவுடன் பொலிஸில் ஆஜரான மேலும் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில் மங்கள சமரவீரவுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இருப்பின் அவர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் தனது சட்டத்தரணியுடன் சென்று இன்று மாத்தறை பொலிஸில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.