புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா கோவிற்குளம் இந்துக் கல்லூரி மாணவர்களான எட்ரியன் ஜெபிரியல் 174புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 55வது இடத்தினையும் க.வினுசிகா 155 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 302வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் க.புலோகசிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
43 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் இரு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 20 மாணவர்கள் 100க்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.