ஒரே நேரத்தில் தாயும் மகளும் குழந்தையை பெற்றெடுத்த அதிசயம்!!

679

 
துருக்கியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் சிரியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பிள்ளை பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய துருகியின், கோனியா பகுதியில் வசித்துவரும் 42 வயதான பாதிமா பீரீன்ஜி, அவரது மகள் 21 வயதான காதா பீரீன்ஜி. இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஆளுக்கொரு ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

இதுபோன்ற அபூர்வ நிகழ்வு உலகிலேயே இது தான் முதன்முறை என்று அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் துருக்கியின் ஜனாதிபதி மீதுள்ள அளவற்ற அன்பு காரணமாக, தாயின் பிள்ளைக்கு Recep என்றும், மகளின் குழந்தைக்கு Tayyip என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

குறித்த தாயாரும் மகளும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா உள்நாட்டுப் போர் காரணமாக துருக்கியில் தஞ்சமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.