தனுஷ்க குணதிலகவிற்கு போட்டித் தடையும் அபராதமும்!!

395

இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவிற்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தத் தடையை விதித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடைபெற்ற காலப் பகுதியில் தனுஷ்க குணதிலக இலங்கை கிரிக்கெட் நிறுவன யாப்பின் விதிகளையும், கிரிக்கெட் நிறுவனத்துடனான வருடாந்த ஒப்பந்தத்தையும் மீறி செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தனுஷ்க குணதிலகவுக்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதுடன் வருடாந்த ஒப்பந்தத்தில் 20 வீத அபராதத்தை அறவிட இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டித் தடை 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் அமுலுக்குவந்துள்ளது