4000 அடி உயரத்திலிருந்து மனைவியை கொலைசெய்ய முயற்சித்த கணவன்!!

259

இங்கிலாந்தின் சாலீஸ்புரி பிளானில் என்ற இடத்தில் தனது மனைவியை கொல்வதற்காக புதிய முறையாக பரசூட்டில் சில மாற்றங்களை செய்து விபத்துக்குள்ளாக்கி உள்ள கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தை சேர்ந்த எமி என்பவரே அவரது மனைவியான விக்டோரியாவிற்கு இவ்வாறு செய்துள்ளார். குறித்த பெண் வானத்தில் பறப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். இதன் காரணமாக அடிக்கடி பரசூட்டின் மூலம் வானில் பயணம் செய்துள்ளார்.

இறுதியாக பரசூட்டில் பயணம் செய்த போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் 4000 அடி உயரத்தில் இருந்து கீழே பரசூட் விழுந்ததில் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார். தற்போது விக்டோரியா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் எமிலி தான் விக்டோரியாவை கொல்வதற்காக புதிய முறையாக பரசூட்டில் சில மாற்றங்களை செய்து இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளார்.

மேலும் அவர் இதற்கு முன்பாகவும் மனைவியைக் கொல்வதற்கு பல முறையிலும் முயற்சித்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர் விக்டோரியாவின் பெயரில் உள்ள பணத்தினை பெருவதற்காகவே இவ்வாறு முயற்சித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.