கொத்தாக செத்து மிதக்கும் நீர்யானைகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

909

 
நமீபியாவில் Bwabwata தேசிய பூங்காவில் கடந்த ஞாயிறு அன்று நூற்றுக்கணக்கான நீர்யானைகள் கொத்தாக செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bwabwata தேசிய பூங்காவில் திடீரென்று அந்த்ராக்ஸ் தாக்குதல் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான நீர்யானைகள் கொத்தாக செத்து மிதப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உரிய ஆய்வுக்கு பின்னரே இதன் காரணம் குறித்து உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இறந்து மிதக்கும் நீர்யானைகளை வல்லூறுகளும் முதலைகளும் பங்குபோட்டு உண்டு வருவதாகவும், உள்ளூர் மக்கள் கண்டிப்பாக அதன் இறைச்சிகளை உண்ண வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

நமீபியா முழுவதும் சுமார் 1300 நீர்யானைகள் உள்ளதாக கருதப்படும் நிலையில் அதில் பெரும்பாலான நீர்யானைகள் அந்த்ராக்ஸ் தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.