24 மணிநேரம் வீடியோ கேம் விளையாடியதால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

550

சீனாவில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண்பார்வை பறிபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி கண் பார்வை பறிபோயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ச்சியாக இடைவெளியின்றி செல்போனை பார்த்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக வைத்தியர்கள் கூறி உள்ளனர்.
நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட குறித்த பெண் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியுள்ளார்.

வார இறுதி நாட்களிலும் விடுமுறையின் போதும் தொடர்ச்சியாக கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் காலை 6 மணிக்கு எழுந்து கேம் விளையாட ஆரம்பிக்கும் குறித்த பெண் மாலை வரையில் கேம்தான் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

சில நேரம் இரவு ஒரு மணி வரையிலும் விளையாடுவதாகவும், பெற்றோர் சாப்பிட அழைத்தாலும் அதனை கேட்காமல் தொடர்ச்சியாக விளையாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த பெண்ணின் கண் பார்வையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதியவர்கள் மத்தியில் அதிகமாகவும், இளைஞர்கள் மத்தியில் அரிதாகவும் காணப்படும் பிரச்சனை இளம்பெண்ணுக்கு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.