மூன்றாம் உலக போர் அச்சம் : ஜப்பானுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

551

அமெரிக்காவுடன் இணைந்துகொண்டு மூன்றாம் உலகப்போருக்கு ஜப்பான் தயாராகுமானால் அந்நாட்டை அடியோடு அழித்துவிடுவோம் என வடகொரியா நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் வடகொரியா 6வது முறையாகவும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.

அத்துடன் வடகொரியாவுடன் இனி அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்ததுடன், அந்நாட்டிற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்துகொண்டு மூன்றாம் உலகப்போருக்கு ஜப்பான் தயாராகுமானால் அந்நாட்டை அடியோடு அழித்துவிடுவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரிய அரச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமெரிக்காவின் யுத்த தரகு வேலைகளை ஜப்பான் சாதகப்படுத்திக் கொள்ள முயற்சித்தால் ஜப்பான் வெற்றிபெற முடியாது. வடகொரியா படைகளின் தாக்குதல்களை ஜப்பானால் எதிர்கொள்ள முடியாது.

கொரிய தீபகற்பத்தில் போர் வெடித்தால் ஜப்பானால் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. போருக்காக அங்கு நிலைநிறுத்தப்படும் அனைத்தும் இல்லாமல் செய்யப்படும்.

அமெரிக்காவின் ஆதரவு என்ற பலத்துடன் போருக்கான ஆயத்தத்தில் ஜப்பான் இறங்கினால் மீளமுடியாத அழிவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவிப்பதாக” அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.