மல்லிகா ஷெராவத்துக்கு விரைவில் திருமணம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை தேர்வு செய்தார்!!

405

Mallika Sherawat

இந்திப்பட உலகின் கவர்ச்சி கன்னியாக பரபரப்பாக பேசப்படுபவர் நடிகை மல்லிகா ஷெரவாத். அரியானா மாநிலத்தின் ஜாட் குடும்பத்தில் பிறந்த மல்லிகா மும்பையில் மொடலிங் தொழில் செய்தார். தொலைக்காட்சி மற்றும் சினிமா படங்களில் கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

மணிரத்தினத்தின் குரு படத்தில் மையா மையா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன்பிறகு கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் கலாசலா சலசலா என்ற பாடலுக்கும் நடனம் ஆடினார்.

லைப் ஓ.கே என்ற ஆங்கில தொலைக்காட்சியில் மாப்பிள்ளை தேடும் வித்தியாசமான நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. இதில் நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டார். அவரை மணக்க விரும்பும் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களிடம் மல்லிகா ஷெராவத்தை விரும்பும் காரணங்கள் பற்றி விளக்கங்கள் கேட்கப்பட்டன. அவர்களுக்கான தகுதி திறமை போட்டியும் நடந்தது.

இறுதியில் 15 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். இதில் ஜாஷன் சிங் என்பவர் மல்லிகாவை கரம் பிடிக்க விரும்பினார். சினிமா நடிகையாக மட்டுமல்லாது மற்ற விஷயங்களிலும் அவரை பிடித்து இருப்பதாக கூறினார்.

ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதமான காரணங்களை தெரிவித்தனர். முடிவில் ஒரு போட்டியாளர் பிடித்துப் போய்விடவே அவரை தனது வாழ்க்கை துணையாக மல்லிகா ஷெராவத் தேர்வு செய்தார். அவரை மணக்கவும் மல்லிகா ஷெராவத் சம்மதித்தார்.

நேற்று இந்நிகழ்ச்சி லைப் ஓ.கே சனலில் ஒளிபரப்பானது. இது தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலும் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியாகும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளரை மல்லிகா ஷெராவத் விரைவில் மணக்க இருக்கிறார்.