2006ம் ஆண்டு வெளியான திருட்டு பயலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால்பதித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மண்ட். இதன் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம்.
இவர் தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மதராச பட்டணம், எங்கேயும் காதல், யுத்தம் செய், அவன் இவன், மாற்றான் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பு மட்டுமின்றி கந்தக்கோட்டை, மைனா, பயணம் உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.
இவ்வாறு திரைப்படத் துறையில் முத்திரை பதித்த கல்பாத்தி எஸ்.அகோரம் சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்திய கிரிக்கெட் சங்கத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் தற்போது ஜெய் நடிப்பில் உருவாகி வரும் நவீன சரஸ்வதி சபதம், தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன்’ உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகிறது.