பிறந்த மண்ணிலேயே கடைசி டெஸ்ட் : நிறைவேறிய சச்சின் விருப்பம்!!

301

sachinஇந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் பிறந்த மண்ணான மும்பையிலேயே அவரது 200வது டெஸ்ட் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

இந்தியா செல்லவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் (நவம்பர் 14-18) போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து இன்று மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அட்டவணை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியை (நவம்பர் 6-10) கொல்கத்தாவில் நடத்தவும்.

சச்சின் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி 200வது டெஸ்ட் போட்டியை, அவரது சொந்த ஊரான மும்பையில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர இப்போட்டியுடன் விடைபெறும் சச்சினுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் பி.சி.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.