என்னை காப்பாற்றுங்கள் : இந்தியாவில் கதறும் ரஷ்ய விலைமாது!!

558

rasia

ரஷ்ய நாட்டை சேர்ந்த விலை மாது ஒருவரை இந்தியர் ஒருவர் சிறை வைத்துள்ள சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
சண்டிகரில் உள்ள பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் தொடர்புகொண்டு பேசிய பெண்ணொருவர் கூறுகையில், நான் ஒரு விலை மாது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த எனக்கு கிரண் என்பவரது தொடர்பு ஒருவாரம் முன்பு கிடைத்தது. கிரண் இங்கு பாலியல் தொழில் செய்துவருகிறார். அவர் வற்புறுத்தலின் பேரில் 36 நபர்களுடன் உறவு கொண்டேன்.

ஆனால் கிரண் 34 வாடிக்கையாளர்களுக்கான தொகையை மட்டுமே கொடுப்பேன் என்றும் வாடிக்கையாளர் ஒருவருக்கு 1500 கொடுப்பதாக கூறினார். இதனால் நான் முழுத் தொகையையும் கேட்டவுடன் என்னை சிறை வைத்துள்ளார். எனவே என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.