
ஜேர்மன் நாட்டில் சுமார் 38 வருடங்களாக மனநோயால் பாதிக்கப்படாத நபர் ஒருவருக்கு மருத்துவம் பார்த்துவந்த மருத்துவமனையில் தவறான செயல் அம்பலமாகியுள்ளது.
ஜேர்மனில் வெட்லிபாலியா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 18 வயது நபர் ஒருவர் டரிட் சின்ட்ரோம் காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சிகிச்சை அளித்துவந்தனர். தற்போது 56 வயதை அடைந்துள்ள அந்த நபரின் உடல்நலக்குறைபாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை மாறாக மோசமான நிலையிலேயே உள்ளார்.
மேலும் அந்த நபரால் பிறரின் துணையில்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் மனநோயால் பாதிக்கப்படாத இந்த நபருக்கு தவறான மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர் இவால்ட் ரான் கூறுனையில் நாங்கள் அவருக்கு சிகிச்சை அளித்தது சம்பந்தமான பதிவுகள் அனைத்தும் எங்களிடம் இருக்கிறது என்றும் ஆனால் இதனை அந்நோயாளியின் சட்டத்தரனி ஏற்க மறுக்கிறார் எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நோயாளியின் சட்டத்தரனி ஸ்டீபன் மற்றும் அவரது துணை சட்டத்தரனி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டதில் அந்நோயாளி நீண்ட நாட்கள் குளிக்காமல் இருப்பதும் இன்னும் அவரது நிலைமை மோசமடைந்துள்ளதையும் பார்வையிட்டுள்ளனர்.





