பாடசாலையில் தீக்குளித்த 6ம் வகுப்பு மாணவி!!

331

Fire girl

தமிழ்நாடு, காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் திடீரென தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருபவர் சினேகா. இவர் நேற்று காலை பள்ளிக்கூட இடைவேளையின்போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து மாணவியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் ஏன் தீக்குளித்தார் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.