நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம் : பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

446

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிபாக நில்வளா கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி, பாலிந்தநுவர, புலத்சிங்கள, ஹொரனை, பத்தேகம மற்றும் தவலம பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அவதானம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பிரதேசங்கள் மற்றும் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பெய்யும் அதிக மழை காரணமாக களு, கிங் மற்றும் நில்வளா கங்கை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நெழுவ மற்றும் எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவின், மலை பகுதிகளில் வாழும் மக்களை அங்கியிருந்து வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் அதிக மழை இரத்தினபுரியில் பெய்துள்ளதாகவும், அது 123.8 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.