சம்மாந்துறை – கோரக்கர் கோயில் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு “இலங்கை கண்டுபிடிப்பாளர்” என்ற அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்தவினால் குறித்த விருது நேற்று (16.10) வழங்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்திலும் சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் பயின்ற இவர் தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவருக்கு அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இலவச அரச போக்குவரத்து வசதிகள், இலவச மருத்துவ சேவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சி போட்டிகளில் பங்குகொள்வதற்கான வசதிகள் மற்றம் கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும் தேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.