வவுனியாவை வந்தடைந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்!!

1020

உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோகபூர்வ  ஜனாதிபதி மக்கள் சேவையின் பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமால் லான்சா மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (21.10.2017) காலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதியினால் பாடசாலை வளாகத்தில் மரம் நாட்டல் வைபவத்துடன் ஆரம்பாகி மாணவர்களின் தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.