டெண்டுல்கரிடம் இருந்து இலங்கை அணி நிறைய கற்றுக்கொண்டது : அர்ஜூன ரணதுங்க!!

325

Ranatungaஇந்தியாவால் இனிமேல் கவாஸ்கர், டெண்டுல்கர் போன்ற வீரர்களை உருவாக்க முடியாது என்பது நிச்சயம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது..

சுனில் கவாஸ்கர் டெண்டுல்கர் ஆகியோரிடம் இருந்து தான் நாங்கள் ஆட்ட நுணுக்கங்களை கற்று கொண்டோம். டெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு இந்தியாவிடம் இருந்து கற்று கொள்ள முடியுமென்று நினைக்கவில்லை.

இந்தியாவால் இனிமேல் கவாஸ்கர், டெண்டுல்கர் போன்ற வீரர்களை உருவாக்க முடியாது என்பது நிச்சயம்.

இலங்கை அணியின் மூத்த வீரர்களான ஜெயவர்த்தன, சங்கக்கார ஓய்வு பெற்ற பிறகு அணியை எப்படி கையாள்வது என்பது பற்றி இலங்கை அணி தயார் நிலையில் இல்லை என்றார்.