இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நேற்று மலிவுவிலையில் மதுவிற்பனை செய்யப்பட்டது. மலிவு விலையில் கிடைத்ததால் அந்த பகுதியில் உள்ள பள்ளி,மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அளவுக்கதிமாக குடித்துவிட்டு, ஆடைகளை கழட்டி அட்டகாசம் செய்தனர்.
மாணவ, மாணவிகள் என்பதால் பொலிஸார் எச்சரித்துவிட்டு அவர்களை வீடுகளில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பகுதியில் நேற்று ஒரு பவுண்டுக்கு மலிவு விலையில் மதுவிற்பனை செய்யப்பட்டது. இவ்வளவு குறைந்த விலையில் மது வகைகளும், வைன் வகைகளும் தாராளமாக கிடைத்ததால் ஏராளமான ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி அளவுக்கதிமாக குடித்துவிட்டு ரோட்டில் மயங்கிக்கிடந்தனர்.
இவர்களில் பலர் பள்ளி, கல்லூரி மாணவிகள். அரைகுறை ஆடையுடன் போதையில் அவர்கள் போட்ட ஆட்டம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியுற வைத்தது.
இந்த தகவல் பொலிசாருக்கு கிடைத்ததும் அவர்கள் விரைந்து வந்து போதையில் மயங்கிக்கிடந்த மாணவிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் மொபைல்களில் இருந்த நம்பர்களின் மூலம் அவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். மலிவு விலையில் மதுவிற்பனை செய்த கடைகளை சீல் வைத்து அடைத்தன





