தமிழக வாழ்வரிமைக் கட்சி சார்பாக ஐந்து அம்சக் கோரிக்கையினை வலியுறுத்தி இந்திய மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
1. மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
2. தோழர் தியாகுவின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.
3. செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடுமாறும், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யுமாறும், இலங்கைச் சிறையில் வாடும் அப்பாவித் தமிழக மீனவர்களை உடனயாக விடுதலை செய்யுமாறு கோரியும்,
4. இந்திய அரசு இலங்கைக்கு எவ்விதமான இராணுவ உதவிகளையும் வழங்க கூடாது எனவும், இலங்கை வீரர்கள் இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும்,
5. இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.