
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்ணொருவர் மாமனாருடன் சேர்ந்து கணவரை கொன்று வீட்டின் முன்பே புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி கும்மனூரை சேர்ந்தவர் தேவன்(58). இவரது மகன் கேசவன்(35).
9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த கேசவன், சங்கீதா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கேசவனைக் காணவில்லை என்று கூறி பொலிசில் புகார் கொடுத்துள்ளார் தேவன். இதனைத் தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சங்கீதாவும் தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
இந்நிலையில் கேசவன் வீட்டின் முன்பு சத்தம் போட்டுக் குரைத்தபடி சில நாய்கள் மண்ணைப் போட்டுத் தோண்டியுள்ளன. மேலும் துர்நாற்றமும் வந்துள்ளது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பொலிசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் பொலிசார் வராததால் மக்களே தோண்ட ஆரம்பித்தனர். அப்போது அங்கு ஒரு பிணம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
மீண்டும் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசார் உடலை கைப்பற்றினர். பின்பு இது தொடர்பா சங்கீதாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் உண்மை முழுவதையும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சங்கீதா கூறுகையில் தினமும் குடித்து விட்டு தன்னை கணவர் அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் மாமனாருடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்று வீட்டின் முன்புறம் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சங்கீதாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் இன்னும் தேவன் கைது செய்யப்படவில்லை.
மேலும் கொலைக்கான காரணமாக அவர் ஒன்றைக் கூறினாலும் கூட வேறு காரணம் எதாவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சங்கீதாவையும் தேவனையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




