தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை: பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!

1170

இந்தியாவில் தனியாக நடந்து சென்ற பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கேரளாவின் கோழிக்கோட்டில் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அப்போது அவருக்கு முன்னால் சென்ற நபர் திடீரென்று அப்பெண்ணை மறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், துணிச்சலாக அந்த நபரை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பான தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.