2011ல் ஸ்ரீராமாஜ்ஜியம் தெலுங்கு படத்தில் நடித்து விட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். படப்பிடிப்பின் கடைசி நாளில் கண்ணீரோடு விடை பெற்றார். அதன் பிறகு திருமணத்துக்கான தடபுடல் ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால் திடீரென அந்த திருமணம் ரத்தாகி இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்தார். ரசிகர்கள் பழைய மாதிரி ஏற்பார்களா, என்று சந்தேகம் அவருக்கு இருந்தது. ஆனால் படம் வெற்றிகரமாக ஓடி நயன்தாராவை திரும்பவும் உச்சத்தில் தூக்கி வைத்தது.
அடுத்து அஜித் ஜோடியாக நடிக்கும் ஆரம்பம் படம் தீபாவளிக்கு வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கும் இது கதிர்வேலன் காதலி படம் வருகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் அனாமிகா படத்தில் கர்ப்பிணி வேடத்தில் வருகிறார். அதன் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. முன்னணி நடிகைகள் பலர் இரண்டாவது ரவுண்டில் காணாமல் போகி உள்ளனர்.
மீண்டும் நடிக்க விரும்பினாலும் அக்கா, அண்ணி வேடங்களே வந்தன. இவர்களுக்கு மத்தியில் நயன்தாராவின் வளர்ச்சி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. காதலில் தோற்றாலும் சினிமாவில் ஜெயித்து வருகிறார்.