வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள் !(படங்கள்)

798

வவுனியா  ஸ்ரீ கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த  கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .

ஐந்தாம்    நாளான  நேற்று 24.10.2017   செவ்வாய்கிழமை   காலை முதல் ஆறுமுக  சுவாமிக்கு அபிசேகங்கள்  இடம்பெற்று  விசேட பூஜை  வழிபாடுகள் இடம்பெற்றன. தொடர்ந்து  தேர் திருப்பணிக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.

பிற்பகல் வேலையில் சூரன்போருக்கான  முன் ஆயத்தமான   சூரன் தளகாடும் நிகழ்வும்  கொட்டும் மழைக்கும்  மத்தியில் இடம்பெற்றது .

மாலையில்  வசந்த மண்டப  பூஜையின்  பின்  முருகபெருமான்  உள்வீதி வெளி வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.