தாயுடன் சண்டை : 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

351

hangஅக்கரைப்பற்று – அட்டாளச்சேனை பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். தனது வீட்டின் பின்புறம் குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

தொங்கிய நிலையில் இருந்த சிறுவன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
ஹஜ் பெருநாள் தினமான நேற்று தனது தாயுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் சிறுவன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணையை அக்கரைப்பற்று நீதவான் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.