குளவி தாக்குதலுக்கு உள்ளான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட பொறியியல் பீட மாணவர்கள் 31 பேரும் மாணவிகள் 5 பேரும் இவ்வாறு குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
ஹந்தான மலை பகுதிக்கு நேற்று மாலை 259 மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். மலையில் இருந்த குளவி கூடு ஒன்று களைந்து மாணவர்களை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவருக்கும் உயிராபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.