ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை!!

345

Colombo Fortபதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் முன் பாய்ந்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பண்டாரவளை ரயில் நிலையத்தில் இருந்து தியத்தலாவ திசையில் 300 மீற்றர் தூரத்தில் இச்சம்பவம் இன்று காலை 08.10 அளவில் இடம்பெற்றுள்ளது.

வெலிமட மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய ஜே.எம்.நதுஷானி ஷாலிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்