30 பெண்களுக்கு எய்ட்ஸ் கிருமியை பரப்பிய நபர் : நீதிமன்றம் அளித்த கடும் தண்டனை!!

517

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி கிருமியை வேண்டுமென்றே 30 பெண்களிடம் பரப்பிய நபருக்கு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது.

இத்தாலியை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ (33), இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்ட போது எச்.ஐ.வி தொற்று தனக்கு இருப்பதை அறிந்து கொண்டார்.

இதன் பின்னரும் 53 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் டலுடோ உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹார்ட் ஸ்டைல் என்ற புனைப்பெயரை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெண்களை டலுடோ தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

இந்த குற்றச்செயலை செய்த டலுடோவை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

டலுடோவின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதல்ல என அவரின் வழக்கறிஞர் வாதாடினார், ஆனால் இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. உடலுறவின் போது, ஆணுறை அணிய டலுடோவிடம் வலியுறுத்தப்பட்டபோது தனக்கு ஒவ்வாமை அல்லது தான் எச் ஐ வி பரிசோதனை மேற்கொண்டுவிட்டதாக பெண்களிடம் அவர் கூறியது தெரியவந்துள்ளது.

டலுடோ மீதான குற்றம் நிரூபிக்கபட்டதையடுத்து அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டலுடோவால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களை தவிர்த்து மேலும் நான்கு பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.