பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்ட நைஜீய இளைஞர் : கட்டிவைத்து அடித்த மக்கள்!!

469

 
புனேவில் நைஜீரிய இளைஞர் ஒருவர் பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்டதாக கூறி பொதுமக்கள், அவரை கட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிபிஏ பயின்று வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் பண்டுகி சலிமா ரச்செட். இவர் சாலையில் வாகனங்களில் சென்றவர்களை தாக்கியும், கார் கண்ணாடிகளை உடைத்தும் இடையூறு செய்திருக்கிறார். மேலும் தன் உடைகளை களைந்து பேருந்தில் சென்ற பெண்களுக்கு ஆபாச சைகைகள் செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.