அயர்லாந்தில் ஏற்பட்ட ஒபிலியா புயலால் விவவசாயிகள் நன்மை அடைந்துள்ளனர். ஒபிலியா புயல் அங்கு மிக மோசமான சேதங்களை உண்டுபண்ணியிருக்கிறது. கட்டிடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் இதனால் சேதமடைந்துள்ளன.
ஆனால் டிப்பெயரி பகுதி ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் ஒபிலியா புயல் உதவி செய்திருக்கிறது.
இந்த சீசனில் ஆப்பிள்கள் அதிகமாக தோட்டத்தில் விளைந்திருந்தன. இதனைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி என்று அவர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து ஆப்பிள்களையும் நிலத்தில் தள்ளிவிட்டது. மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை.
போர்வை விரித்ததுபோல் நிலமே தெரியாதபடி ஆப்பிள்களால் தோட்டம் மூடப்பட்டிருந்தது. மேலும், இந்த புயலால் பழங்கள் எந்த விதத்திலும் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









