வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : இலங்கையில் ஏற்படவுள்ள பாதிப்புகள்!!

1092

நாட்டில் இன்றைய தினமும் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டை அண்டிய பகுதியில் அமைந்துள்ள வளிமண்டலத்தில் தாழமுக்க நீடித்து வருவதனால் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நாட்டின் அநேக பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் அறிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டிலும், சப்ரகமுவ, ஊவா, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக் கூடும் எனவும், 150 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.



இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக அடிப்படையில் கடுமையான காற்று வீசும் எனவும், இடி மின்னல் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.