மைத்திரி தரப்பினர் விடுத்த அழைப்பை நிராகரித்த மஹிந்த அணி!

523

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்காதிருக்க, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுடனான நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு, அக் கட்சி சார்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்றையதினம், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடி, இது பற்றி கலந்துரையாடியுள்ளனர்.



இதன்போது, தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.