அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 26 உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திலேயே நேற்று இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பம் இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத நபரொருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி 26 பேர் உயிரிழந்துள்ளதோடு 24 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளதோடு படுகாயம் அடைந்தவர்களை ஹெலிகொப்டரின் உதவியுடன் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைநதவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









