வடகொரியாவுடன் தரைவழி தாக்குதல் மட்டுமே சாத்தியம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
வடகொரியா மீது தடை விதிப்பதற்கு முக்கிய காரணமே அமெரிக்கா தான் என்பதால் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதனால் அமெரிக்கா தென் கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து வடகொரியாவைத் தாக்குவதற்கு தொடர்ந்து வியூகங்களை அமெரிக்க ராணுவ தளமான பெண்டகன் வகுத்து வருகிறது.
இதுகுறித்து பெண்டகன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வடகொரியாவின் அணுஆயுதங்களை தரைவழித் தாக்குதலால் மட்டுமே அழிக்க முடியும் என்று கூறியுள்ளார்.






